உள்நாட்டு யுத்தத்தின் போது கூட நாடு வங்குரோத்தடைய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வாய்ப்பளிக்கவில்லை - எதிர்க்கட்சி தலைவர்

Published By: Digital Desk 3

01 May, 2023 | 12:39 PM
image

(எம்.மனோசித்ரா)

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் உள்நாட்டு யுத்த நிலைமையின் போதும் இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியுள்ளது. இந்நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 30 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை கொழும்பு - புதுக்கடையிலுள்ள அவரது உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எம்மால் வழங்கப்படக் கூடிய கௌரவமாகும். அடுத்த ஆண்டு ஜூன் 23ஆம் திகதி அவரது நூறாவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

இன்று எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கவில்லை.

உள்நாட்டு யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்திலும் தொழிற்சாலை துறைக்கான கொள்கை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் யுத்தத்துக்கு மத்தியிலும் நாடு அபிவிருத்தியடைந்தது.

ஆனால் 30 ஆண்டுகளின் பின்னர் இன்று நாடு வங்குரோத்தடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிருடனிருந்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்நிலைமையிலிந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13