பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாட தீர்மானம் திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன - விஜேதாச ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

01 May, 2023 | 09:51 AM
image

(எம்.மனோசித்ரா)

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த வாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையை பிற்போடுவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்த அடுத்த நடவடிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன் போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எமது தெளிவுபடுத்தல்களின் பின்னர் எந்தவொரு கட்சியும் தத்தமது நிலைப்பாடுகளையும், திருத்தங்களையும் முன்வைக்க முடியும்.

அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி எந்தவொரு தரப்பினருடனும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இது குறித்த நிலைப்பாடுகள் மற்றும் திருத்தங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எனினும் இதுவரையிலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே அதன் நிலைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளது.

இவ்வாறு எந்தவொரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கும், கலந்துரையாடுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம். எனவே அடுத்த வாரத்திலாவது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரால் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13