ஐ.தே. கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் : விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி! 

Published By: Nanthini

30 Apr, 2023 | 08:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் 'வெற்றி பெறுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் திங்கட்கிழமை (மே 1) காலை 9.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

அதன்போது ஜனாதிபதியின் விசேட உரையும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, வாகன பேரணி, கண்காட்சிகள் என கட்சிகளின் பலத்தை காட்டும் சம்பிரதாய மே தின கூட்டத்தில் இருந்து விலகி, நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ளும் நோக்கில் 'வெற்றி பெறுவோம்' எனும் தொனிப்பொருள் மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

அத்துடன், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிகமான இளைஞர்களின் பங்குபற்றலுடன் இம்முறை மே தின கொண்டாட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இளைஞர்களை வெற்றி பெறச்செய்யும் வேலைத்திட்டத்தையும் மே தின கூட்டத்தின்போது வெளியிடவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் அதிகமான மக்களை அழைத்துவந்து, கட்சிகளின் பலத்தை காட்டும் வீண் விரயங்கள் மற்றும் சம்பிரதாய மே தின நிகழ்வில் இருந்து விலகி, ஒழுக்கமான, முறையான மே தின கூட்டம் ஒன்றை நடத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17