கிளிநொச்சியில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு

Published By: Nanthini

29 Apr, 2023 | 09:19 PM
image

'அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம்; மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்' எனும் தொனிப்பொருளில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டிலான மே தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் எதிர்வரும் மே 1ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பில் அக்கட்சியின் மே தின செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்கள் ஏற்கனவே போரின் நெருக்கடியையும், போர்க்காலப் பொருளாதார நெருக்கடியையும் மிக நீண்ட காலமாக சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

அந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு முன் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியோடு தொடர்ந்து வரும் இன ஒடுக்குமுறையும் மேலும் பெரிய நெருக்கடிச் சுமையை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கு மத்தியில், புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாட்டில் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே ஆட்சி நடத்தப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டு மக்கள் சிந்திய கண்ணீரும் இரத்தமும் கொஞ்சமல்ல. இதிலிருந்து நாம் மீள வேண்டும். இனியும் சம்பிரதாய அரசியல் வாக்குறுதிகளை நாம் நம்ப முடியாது. சம்பிரதாய மே தின நிகழ்வை நடத்துவதில் அர்த்தமில்லை.

இன்று பிற நாடுகளிலும், சர்வதேச வங்கிகளிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள நாட்டில் நாம் போராடாமல் இருக்க முடியாது. எமது போராட்டம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கட்டும். மக்களின் விடுதலையை நோக்கியதாக அமையட்டும் என அக்குறிப்பில்  காணப்படுகிறது.

அத்துடன், குறித்த நாளில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்வில் பொது மக்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39