அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை - ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல

Published By: Digital Desk 5

29 Apr, 2023 | 01:36 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதா என்று சிந்திக்க வேண்டும்.

அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு நாம் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஏனைய வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறே கோருகின்றோம் என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. இவ்வாறான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் போது, ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை அதனை எம்மால் வெளிப்படுத்த முடியாது.

எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட பின்னரே அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இது தொடர்பில் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது வரி அதிகரிப்பு தொடர்பிலும் அவர் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரி அதிகரிக்கப்படுவது சாதாரண விடயமாகும். எனினும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதன் வீதத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதா என்று சிந்திக்க வேண்டும்.

இதற்கான பகிரங்க அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் திகதி முதல் விடுக்கப்பட்டது. அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு நாம் கூறவில்லை. மாறான வேறு பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43