(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்று சாதனை ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து சாதனைகளும் மைல்கற்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (28) மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய இன்று நிகழ்த்தினார்.
முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த போல் ஸ்டேர்லிங்கின் விக்கெட்டை இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டினார்.
அவர் 7 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்த இலங்கை விரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
டில்ருவன் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 11 போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்தன் மூலம் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய முன்னைய இலங்கை வீரர்களாக இருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM