(நெவில் அன்தனி)
சர்வசாதாரணமாக சாதனைகள் குவிக்கப்பட்ட வண்ணம் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வலுவான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து பெற்ற 492 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை போட்டியின் நான்காம் நாளான இன்று வியாழக்கிழமை (27) பகல்போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 261 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நிஷான் மதுஷ்க தனது கன்னிச் சதத்தை இரட்டைச் சதமாக்கி 202 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் சதங்களும் சாதனைகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
அயர்லாந்தின் அதிகூடிய இணைப்பாட்ட சாதனை, மொத்த எண்ணிக்கை சாதனைகளைத் தொடர்ந்து காலி விளையாட்டரங்கிற்கான இலங்கையின் ஆரம்ப விக்கெட் சாதனை நேற்று புதன்கிழமை நிலைநாட்டப்பட்டது.
இந் நிலையில் மற்றொரு சாதனை இலங்கையினால் இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 துடுப்பாட்ட வீரர்களும் இலங்கை சார்பாக சதங்கள் குவித்தது இதுவே முதல் தடவையாகும். திமுத் கருணாரட்ன (115), நிஷான் மதுஷ்க (202 ஆ.இ.), குசல் மெண்டிஸ் (160 ஆ.இ.) ஆகிய முதல் 3 துடுப்பாட்ட வீரர்களும் இந்த டெஸ்டில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM