(எம்.வை.எம்.சியாம்)
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஹிரேவத்த, அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த நபர் தனது நண்பர்கள் இருவருடன் ஹிரேவத்த கடற்கரையினை அண்மித்த பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த மற்றுமொரு குழுவினருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது முரண்பாடு வலுப்பெற மற்றைய குழுவில் இருந்த ஒருவரினால் குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM