பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக இருக்கலாம் - நளின் பண்டார தெரிவிப்பு

Published By: Digital Desk 3

27 Apr, 2023 | 11:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக  அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலே சட்டம் அமைத்து வருகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என எண்ணத்தோன்றுகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பாதுகாத்து பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்து, அரசாங்கத்துக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை தடுப்பதற்கு தேவையான சட்டங்களையே தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற ஒழுங்குமுறைகளை பலப்படுத்திவருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என என்ன தோன்றுகிறது.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உரிய நேரத்தில் முறையான தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் வங்குரோத்து அடைந்த நாட்டில் வங்குரோத்து பிரஜைகளாக நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் நாட்டை பாதாளத்துக்கு கொண்டுசெல்ல பங்காளியாகியவர்கள் அல்ல. அரச ஊழியர்களுக்கு இந்தளவு பாரிய சுமையை சுமத்தியது ராஜபக்ஷ் அரசாங்கமாகும்.

மேலும், அரச சேவையை பலப்படுத்தாமல் அரச சேவை செயற்திறமையை பலப்படுத்தவேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.  அரச ஊழியர்களை அல்ல. மாறாக தொழில் முயற்சியாளர்களையே ஏற்படுத்தவேண்டும். ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தால் தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றன. ஆனால் இன்று தொழில் முயற்சியாளர்கள் இல்லாத நிலைக்கு நாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01