பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக இருக்கலாம் - நளின் பண்டார தெரிவிப்பு

Published By: Digital Desk 3

27 Apr, 2023 | 11:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக  அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலே சட்டம் அமைத்து வருகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என எண்ணத்தோன்றுகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பாதுகாத்து பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்து, அரசாங்கத்துக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை தடுப்பதற்கு தேவையான சட்டங்களையே தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற ஒழுங்குமுறைகளை பலப்படுத்திவருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையா என என்ன தோன்றுகிறது.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உரிய நேரத்தில் முறையான தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் வங்குரோத்து அடைந்த நாட்டில் வங்குரோத்து பிரஜைகளாக நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் நாட்டை பாதாளத்துக்கு கொண்டுசெல்ல பங்காளியாகியவர்கள் அல்ல. அரச ஊழியர்களுக்கு இந்தளவு பாரிய சுமையை சுமத்தியது ராஜபக்ஷ் அரசாங்கமாகும்.

மேலும், அரச சேவையை பலப்படுத்தாமல் அரச சேவை செயற்திறமையை பலப்படுத்தவேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.  அரச ஊழியர்களை அல்ல. மாறாக தொழில் முயற்சியாளர்களையே ஏற்படுத்தவேண்டும். ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தால் தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றன. ஆனால் இன்று தொழில் முயற்சியாளர்கள் இல்லாத நிலைக்கு நாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும்...

2026-01-20 18:23:06
news-image

சீன நிறுவனம் கோரிய 980 மில்லியன்...

2026-01-20 17:39:42
news-image

நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும்...

2026-01-20 18:18:44
news-image

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர...

2026-01-20 15:36:04
news-image

கல்வி அமைச்சின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கமையவே...

2026-01-20 17:56:02
news-image

வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு...

2026-01-20 15:30:16
news-image

வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள...

2026-01-20 17:53:13
news-image

யாழில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு...

2026-01-20 22:07:52
news-image

அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது ; அஜித்...

2026-01-20 19:45:23
news-image

புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு...

2026-01-20 14:41:22
news-image

மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை...

2026-01-20 17:40:20
news-image

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது...

2026-01-20 14:37:38