(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து குவித்த சாதனைமிகு 492 ஓட்டங்களுக்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் பகல் போசன இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன குவித்த 16ஆவது சதம் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ குவித்த கன்னிச் சதம் ஆகியன இலங்கை அணியை வலுவான நிலையை நோக்கி நகரவைத்துள்ளன.
போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி சதங்களைக் குவித்தனர்.
எனினும் பகல் போசன இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது திமுத் கருணாரட்ன 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ 104 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்கள் இருவரும் சதங்கள் குவித்த 4ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் மார்வன் அத்தபத்து சனத் ஜயசூரிய ஆரம்ப ஜோடியினர் இரண்டு தடவைகள் சதங்கள் குவித்ததுடன் திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமான்ன ஜோடியினர் ஒரு தடவை சதங்கள் குவித்திருந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்கிரிய மைதானத்தில் 2000ஆம் ஆண்டு மார்வன் அத்தபத்து (207 ஆ.இ.), சனத் ஜயசூரிய (188) ஆகிய இருவரும் சதங்கள் குவித்ததுடன் ஆரம்ப வீக்கெட்டில் 335 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நான்கு வருடங்கள் கழித்து ஸிம்பாப்வேக்கு எதிராக ஹரர்ரேயில் இதே ஜோடியினர் இரண்டாவது தடவையாக சதங்களைக் குவித்ததுடன் 281 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர். அப் போட்டியில் அத்தபத்து 170 ஓட்டங்களையும் ஜயசூரிய 157 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷுக்கு எதிராக பல்லேகலையில் 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரட்ன (118), லஹிரு திரிமான்ன (140) ஆகிய இருவரும் ஆரம்ப வீரர்களாக சதங்கள் குவித்ததுடன் 209 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இலங்கை சார்பாக ஆரம்ப வீரர்கள் இருவரும் ஒரே டெஸ்டில் சதம் குவித்தவர்கள் பட்டியலில் இப்போது திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் இணைந்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப வீரர்கள் இருவர் சதங்கள் குவித்தது இது 82ஆவது சந்தர்ப்பமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM