ஜே.வி.பி.யினருக்கு அருகதை இல்லை - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Published By: Vishnu

25 Apr, 2023 | 06:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கதைப்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. மிகவும் கோரமான குற்றச் செயலே அந்த தாக்குதல். அது தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நீர்கொழும்பை சுற்றி வளைக்கவும் ஜே.வி.பி.யினர் திட்டமிட்டனர். இவர்கள் இப்ராஹிமின் வீட்டுக்கு முன்னால் சென்றே போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். அவரே அவர்களின் தேசியப் பட்டியலில் இருந்தார். அவரின் மகன்களே தாக்குதலில் தொடர்பு பட்டிருந்தனர். 

ஜே,வி,பி. தலைவர் அனுரகுமார  திஸாநாயக்க அன்று தாக்குதலின் போது கனடாவில் இருந்தார். நான் அமெரிக்காவில் இருந்தேன். ஆனால் நான் ஒருநாளில் வந்துவிட்டேன். ஆனால் அனுரகுமார 5 நாட்களின் பின்னரே வந்தார். 

இதனால் ஜே.வி.பியினருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கதைக்க அருகதையில்லை. வேண்டுமென்றால் தாக்குதல் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு நான் ஜே.வி.பியினரை அழைக்கின்றேன்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதனை அனுரகுமாரவிடம்தான் கேட்க வேண்டும். 

கோத்தாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராஹிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம். இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராஹிமிடம் அனுரகுமார கேட்கலாம் தானே.

எனவே கத்தோலிக்க மக்களின் துன்பத்தை வைத்து அரசியல் செய்ய நான் இடமளிக்கப் போவதில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு நான் ஒருபோதும் அரசியல் லாபம் தேடியது இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01