யாழ். புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் - பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

Published By: Vishnu

25 Apr, 2023 | 05:09 PM
image

வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 10ஆம் திகதி புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் நடாத்தப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. 

அதனால் தனது கடமைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பாடலின் சத்தத்தை குறைக்குமாறும் தாக சாந்தி நிலையத்தில் நின்றவர்களிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

அதனை அவர்கள் பொருட்படுத்தாது இருந்துள்ளனர். அதன் பின் குழு ஒன்று மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. 

அதனை அடுத்து மருத்துவர் , தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாடு செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் கடந்த நிலையிலும் இதுவரை பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காதமையை கண்டித்தும், மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்யுமாறும் , சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரி தமது மருத்துவ சேவைகளை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு...

2023-09-24 16:11:20