அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் - நாமல் கவலை

Published By: Vishnu

24 Apr, 2023 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளை பகுதியில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அந்த தீர்மானத்தை ஒரே கட்டத்தில் செயற்படுத்தப்படுத்தியமை பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. 

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு சேதன பசளை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு தரப்பினர் வழங்கிய தவறான ஆலோசனையால் சேதன பசளை திட்டம் தோல்வியடைந்தது.

உர பற்றாக்குறை,எரிபொருள் மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்பு மக்கள் போராட்டத்தை தோற்றுவித்தது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தவே காலி முகத்திடல் போராட்டம் தோற்றம் பெற்றது.

போராட்டம் ஊடாக இளைஞர் யுவதிகள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள். காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முன்னிலையில் இருந்து செயற்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிய முடிகிறது.தவறாக வழிநடத்தப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.

மின் விநியோக நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு மெகாவாட் மின் அலகு கூட தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த ராஜபக்ஷர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகியுள்ளோம்.

மோசடி செய்யப்பட்ட அரச நிதியை ராஜபக்ஷர்கள் உலக நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறான நிதி ஏதும் பதுக்கப்பட்டிருக்குமாயின் அவற்றை அரசுடமையாக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21