(எம்.மனோசித்ரா)
மாத்தறை - மிதிகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் நால்வர் வந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த காரில் வந்த நால்வரில் மூவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.
அதற்கமைய, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய 'மிதிகம சூட்டி' என்றழைக்கப்படும் ராஜபக்ஷ பத்திரணலாகே பிரபாத் மதுஷங்க, 30 வயதுடைய 'தடியா' என்றழைக்கப்படும் பஹலகே துஷார மதுஷங்க மற்றும் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய தித்தகல்ல கமகே சமிது சந்தீப நிலுபுல் ஆகிய மூவரை கைதுசெய்வதற்கே பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் துணை பொலிஸ் அத்தியட்சகரின் 071 8592910 என்ற இலக்கத்துக்கு அல்லது மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் 071 8596406 என்ற இலக்கத்துக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM