(எம்.சி.நஜிமுதீன்)
யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை இலங்கை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது. எனவே சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் நிச்சயம் இடம்பெறும். அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்கும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுபைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் தூரநோக்கற்ற திட்டத்தினால் எமது இராணுவம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டார். அது முழுமையாக பக்கச்சார்பான விசாரணை நடவடிக்கையாகும். ஏனெனில் அவ்விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாட்சிகள் தொடர்பில் அடையாளம் காட்டப்படவில்லை. மேலும் அவர்கள் சமபந்தமதான தகவலை 30 வருடங்களுக்கு வெளியிடவும் முடியாது.
எனவே இவ்வாறான சாட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணைக்கிணங்க இலங்கைப் படையினர் பெருமளவிலான சிவில் தரப்பினரை கொலை செய்ததாகவும் சிவில் தரப்பினரை காணாமல்போகச் செய்ததாகவும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், வடக்கு மாகாண மக்களை கொலைசெய்வதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையை அடிப்படையகாக்க கொண்டு அமெரிக்காக இலங்கைக்கு எதிராக பிரேரனை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்தது. எனவே அந்த பிரேரனையை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்து தமது யோசனையாக முன்வைத்ததுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு ஏனைய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆகவே அப்பிரேரனை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அப்பிரேரனையின் ஆறாம் உறுப்புரையில் இலங்கை படையினருக்கு எதிராக உள்ள யுத்தக் குற்ற விசாரணை செய்வதற்காக பொதுநலவாய அமைப்புகளின் நீதிபதிகள் உள்ளடங்கலாக சர்வதேச நீதிபதிகளை கட்டாயமாக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர் தற்போது அதனை நிராகரித்தாலும் அவருடைய அரசாங்கம்தான் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை சர்வதேசத்திற்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளது. ஆகவே சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறுவதற்கு அவருக்கோ அல்லது அவருடைய அரசாங்கத்திற்கோ இயலாத விடயமாகும்.
மேலும் தற்போது மற்றுமொரு பயங்கரமான விடயம் நடந்தேறியுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் நியமித்த நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி தயாரித்துள்ள அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளபோதும் அரசாங்கம் நியமித்த செயலணி குறித்த அறிக்கையினை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM