உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இனடம்பெற்று இன்று 21 ஆம் திகதியுடன் 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் முதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை காலை 8 மணி முதல் 8.45 மணி வரை மக்கள் கைகோர்த்து அமைதியான முறையில் மனிதச் சங்கிலி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இன்று (21) காலை விசேட ஆராதனை இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதல் இடம்பெற்ற போது கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் வைத்து காயம் அடைந்தவர்களும், சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுடைய உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM