அதிக வெப்ப நிலையுடனான காலநிலை குறித்து வைத்திய நிபுணர் ரூபி ரூபன் விடுத்துள்ள எச்சரிக்கை  

Published By: Nanthini

21 Apr, 2023 | 05:51 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்த வெப்ப காலநிலை மே மாத இறுதி வரை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (21)இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அதிக வெப்ப நிலை காரணமாக குறிப்பிட்ட சில நோய் நிலைமைகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, மனநலம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறான நோய்கள் ஏற்படும்போது மக்கள் வன்முறையை நோக்கி தூண்டப்படக்கூடும். 

வன்முறை எண்ணங்களால் வெவ்வேறு குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

வழமையான வெப்ப நிலையை விட ஒரு பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனநலம் தொடர்பான நோய் நிலைமைகள் 2 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.

எனவே, அதிகளவில் நீர் அருந்துதல், அநாவசியமாக வெயிலில் செல்வதை தவிர்த்துக்கொள்ளல் உள்ளிட்டவற்றை சகலரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37