சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி

Published By: Vishnu

21 Apr, 2023 | 04:37 PM
image

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (21) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு பிள்ளையார் அடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை தேவாலய பிரதம போதகர் ரோசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. 

இங்கு உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும் இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட வழிபாடுகள் பிரதம போதகரால் முன்னெடுக்கப்பட்டது. 

உயிரிழந்த உறவுகளின் நினைவாக குண்டு வெடிப்பு இடம்பெற்ற மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இத்துடன் உயிரிழந்த உறவுகளுக்கு சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடித்த நேரத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கு நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. 

சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற இந்த சீயோன் தேவாலயம் இன்னும் புனரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17