ஜம்இய்யதுல் உலமா சபை பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய அவசர கடிதம்

Published By: Digital Desk 5

21 Apr, 2023 | 12:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிந்து சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்கும் தீய சக்திகளை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அக்குறணை பிரதேசத்தில் குண்டுதாக்குதல் தொடர்பாக வெளிவந்த தகவல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் பதில்  தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா ஆகியோர் கைச்சாத்திட்டு பொலிஸ்மா அதிபர் சந்தன டி விக்கிரமரத்னவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கண்டி, அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து, கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர், அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடத்தி குறித்த தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக் கொண்டு வரவேண்டும்.

அத்துடன் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் தீய சக்திகளை அடையாளங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

அத்துடன் மேற்படி தகவல் தொடர்பில் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00