சர்வதேச நாணய நிதிய விவகாரம் : பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில்

Published By: Vishnu

20 Apr, 2023 | 06:01 PM
image

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (20) முற்பகல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கைப் பொருளாதார மீட்புக்கான விரைவான நிலைமாற்றத்தினை அடைவதற்காகவும் அதனைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் நலன் பயக்கும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன்  இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3.0 பில்லியன் ஐக்கிய அமெரிக்க. டொலர்கள் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு 2023 மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்படுவதுடன், மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கூடவுள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2023.01.20 ஆம் திகதி 2317/28 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஏப்ரல் 26 ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் 2023.04.17 ஆம் திகதிய 2328/02 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை விவாதமின்றி அனுமதிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

அதனையடுத்து மாலை 5.00 மணி வரை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் காலை 10.30 முதல் மாலை  5.00 மணி வரை முறையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெறும் விவாதத்தை அடுத்து உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28