6 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

Published By: Digital Desk 5

20 Apr, 2023 | 03:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பாரிய கடற் பகுதிக்கும் ஏனைய சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளும் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பன நியமிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக 6 பில்லியன் டொலர் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

எனினும் இவ்விடயத்தில் மூன்றாம் தரப்பினர் ஊடாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடிய இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை சாதாரணமாக இழந்து விட முடியாது.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அது மாத்திரமின்றி இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றையும் , பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் அமைக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் 29 நாட்களே உள்ளன. எனவே இதற்கான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முதலில் எமது நாட்டில் ஆரம்பிக்க வேண்டும். அவை வெற்றியளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை சிங்கப்பூர் செல்லலாம். 

அதனை விடுத்து ஆரம்பத்திலேயே சிங்கபூரை நாடுவது பொறுத்தமற்றது. எவ்வாறிருப்பினும் இவ்விடயத்தில் மோசடிகள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடமளித்து விடக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்திய...

2025-01-15 15:54:12
news-image

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க...

2025-01-15 15:46:58
news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59