(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல்,எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஆகியன தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2021 ஆம் ஆண்டு நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி கடல் வளத்துக்கு பாரிய சேதம் விளைவித்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் மற்றும் வழக்கு தாக்கல் செய்யும் விவகாரங்கள் கடந்த காலங்களில் தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் ஆனால் தற்போது சகல விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் சமுத்திர வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை நியமித்த நிபுணர் குழு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் கிடைக்கப் பெற்றது.சர்வதேச நீதி நிறுவனத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
நட்டஈடு பெறும் விவகாரத்தில் ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாக நியூ டைமன் கப்பல் விவகாரத்திலும் ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
நியூ டைமன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பிடாமல் கப்பலை வெளியேற இடமளிக்க வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் அறிவித்தும்,அதனை செயற்படுத்தாமல் கப்பல் வெளியேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM