தேவையான பொருட்கள்:
ஐஸ்கிரீம் செய்ய பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்வதற்கு:
வேகவைத்த சேமியா- 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் - 3
முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலில் பிரெட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டாம்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும்.
கடைசியாக ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM