திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னரே தேர்தல் குறித்து அறிவிக்கப்படும்

Published By: Digital Desk 3

19 Apr, 2023 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த முடியாது என அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 25ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலில் மார்ச்  9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடாத்துவதற்கு நிதி வழங்கப்படாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிதி நெருக்கடி காரணமாக காலவரையறையின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31