இந்துக்கள் போற்றி வழிபடும் 'அட்சய திருதியை' தினம், இவ்வருடம் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளான எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
சயம்' என்றால் 'தேய்தல்'... 'அட்சயம்' என்றால் 'தேயாமல் வளர்வது' என பொருள்படும். அத்தோடு, 'அட்சய' என்றால் 'குறையாதது' என்றும் சொல்லப்படும். அதனால்தான் 'அட்சய பாத்திரம்' அள்ள அள்ள குறையாதது என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.
இம்முறை சனீஸ்வர பகவானின் பரிபூரண நல்லாசியுடன் அட்சய திருதியை பிறக்கிறது.
சனி பகவானைப் போல் அள்ளிக் கொடுப்பவர் யாரும் இல்லை என்று சொல்வர். அவரது ஆதிக்கம் நிறைந்த நாளில் அட்சய திருதியை நாளன்று வீடுகளில் தங்கம், வெள்ளி நகைகள் வாங்கி வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
நகைகளை வாங்காதவர்கள் மஞ்சள், குங்குமம், உப்பு போன்ற மங்கலகரமான பொருட்களையும் வாங்கி வீட்டில் வைக்கலாம்.
ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். அன்றைய நாளில் அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பெரும் புண்ணிய காரியமாகும். அத்தோடு, கால்நடைகளுக்கு ஆகாரம் வழங்கலாம்.
பூமி வறண்டு காட்சியளித்தபோது பகீரதன் சிவனை பூஜித்து கடுந்தவம் செய்து, கங்கையை பூமிக்கு வரவழைத்த நாளே அட்சய தினம் என்றொரு கதையுண்டு.
வனவாசத்தின்போது பலவித துன்பங்களை அனுபவித்த பாண்டவர்களுக்கு சூரிய பகவான் அக்ஷய பாத்திரம் வழங்கிய தினமும் இந்நாளே என்றும் சொல்லப்படுகிறது.
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலைக்கு மணிபல்லவ நாட்டில் இறைவனால் 'அமுத சுரபி' எனும் அட்சய பாத்திரம் கிடைத்ததுவும் இந்த நாளிலேயாகும் என்றும் கூறப்படுகிறது.
ஐஷ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி தோன்றியதும், ஸ்ரீ மகாலட்சுமி திருமாலின் திருமார்பில் குடிகொண்டு அருளாசி வழங்கியதும், மகாலட்சுமியிடம் குபேரன் 'நிதிக்கலசம்' பெற்றதும், மகாவிஷ்ணு பரசுராமர் அவதாரம் எடுத்ததும், விநாயகருக்கு வேதவியாசர் மகாபாரதத்தை போதிக்க, அதை விநாயகர் தனது ஒற்றை தந்தத்தால் எழுதியதும், அண்ணபூரணியும் பிரம்மனும் பூவுலகில் அவதரித்ததும், திருப்பாற்கடலை கடைந்தபோது தேவாமிர்தம், லட்சுமி, வலம்புரி சங்கு, ஐராவதம், கற்பகத்தரு போன்ற சிறப்பு மிக்க செல்வங்கள் கிடைத்ததும் இந்த அட்சய தினத்திலாகும் என்பது ஐதீகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM