(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள பின்னணியில் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
உண்மையை பகிரங்கப்படுத்த அரசியல் நோக்கமற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் நாளை மறுதினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரமானது. சட்டமூல வரைபு தொடர்பில் அரசாங்கத்துக்குள் கடும் எதிர்ப்பு தோற்றம் பெற்றுள்ளது.
சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்கி ஆட்சியை கைப்பற்றிய பொதுஜன பெரமுன தற்போது குண்டு தாக்குதல் சம்பவத்தை மறந்து விட்டது.குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன.
குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நாளை மறுதினத்துடன் (வியாழக்கிழமை) நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.
உண்மையை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் நோக்கமற்ற வகையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM