ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நான்காண்டு நிறைவு : நாட்டு மக்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - காவிந்த

Published By: Digital Desk 3

18 Apr, 2023 | 05:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள பின்னணியில் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

உண்மையை பகிரங்கப்படுத்த அரசியல் நோக்கமற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் நாளை மறுதினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரமானது. சட்டமூல வரைபு தொடர்பில் அரசாங்கத்துக்குள் கடும் எதிர்ப்பு தோற்றம் பெற்றுள்ளது.

சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்கி ஆட்சியை கைப்பற்றிய பொதுஜன பெரமுன தற்போது குண்டு தாக்குதல் சம்பவத்தை மறந்து விட்டது.குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன.

குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நாளை மறுதினத்துடன் (வியாழக்கிழமை) நான்கு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.

உண்மையை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் நோக்கமற்ற வகையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் கைது...

2025-12-13 13:43:47
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை...

2025-12-13 15:25:09
news-image

நான்கு பேருடன் பயணித்த வேன் கால்வாயில்...

2025-12-13 13:27:28
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30