தேசிய அரசாங்கம் : கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை - காமினி லொக்குகே

Published By: Vishnu

18 Apr, 2023 | 04:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)


தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெர முனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியை தெரிவு செய்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.குறுகிய காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

நெருக்கடியான நேரத்தில் சவால்களை பொறுப்பேற்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என குறிப்பிடுகிறார்கள்.


சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் ஸ்திரமான தன்மையில் காணப்பட வேண்டும்.சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவார்.


பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்த போது எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை.

நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் தற்போது அரசாங்கத்துடன் இணைய எதிர்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.


தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06