மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று (14) அதிகாலை 1.35 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தவர்கள் சடலத்தை கண்டு, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்க, அதன் பின்னர் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு புறப்பட்ட கடுகதி ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த நபர், சத்துரு கொண்டான் பாடசாலை வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இராமசாமி ரமேஷ்காந் (44) என்பவரே என அவரது மனைவி மற்றும் சகோதரி அடையாளம் காட்டியுள்ளனர்.
முன்னதாக இம்மாதம் கடந்த 3 மற்றும் 10ஆம் திகதிகளில் இருவர் ரயில் விபத்தில் பலியாகியிருந்த நிலையில், மூன்றாவதாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, கடந்த 10 நாட்களுக்குள் புகையிரத விபத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM