பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளை பிரிப்பதற்கான சத்திரசிகிச்சைகள் சவூதி மன்னரின் உதவியின் கீழ் நடைபெறவுள்ளன.
எகிப்தை சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகள்களான மென்னா மற்றும் மே என்போர் பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாவர்.
இவர்களது தலைப்பகுதி ஒன்றாக ஒட்டிய நிலையில் உள்ளது. அதைப் பிரிப்பதற்காக அதிகளவான பணம் தேவைப்படுகின்றது.
குறித்த சிறுமிகள் பற்றி கேள்வியுற்ற சவூதி மன்னர் சல்மான் அல் சவூட், உடனடியாக அவர்களை சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் அப்துல் அஸிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பணித்துள்ளார்.
மேலும் குறித்த சிறுமிகளின் சிகிச்சைக்கு தேவையான செலவீனங்கள் அனைத்தையும் சவூதி மன்னரே ஏற்பதாக மன்னரின் அறக்கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
குறித்த சிறுமிகளை குணப்படுத்துவதற்கு பணம் இல்லாது தவித்து வந்த நிலையில் சவூதி மன்னர் உதவியுள்ளமை தனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தருவதாக சிறுமிகளின் தந்தை மன்னருக்கு தனது நன்றிகளை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM