குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முயற்சி - சூழல் ஆர்வலர் கடும் எதிர்ப்பு

Published By: Rajeeban

13 Apr, 2023 | 01:09 PM
image

இலங்கையில் காணப்படும் சில வகை குரங்குகளை  சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமித்தமை குறித்து சூழல் விவகாரங்களிற்கான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் மாத்திரம் சில வகை குரங்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை குரங்குகளே பயிர்ச்செய்கைக்கு  பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால் இது குறித்த தீர்மானங்களை விஞ்ஞான அடிப்படையில் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக குரங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்ற முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்படும் சீனாவில் அவைகளிற்கு உகந்த காலநிலை காணப்படுமா? போன்ற விடயங்கள் குறித்து முதலில் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயிரியல் பூங்காவிற்கு கூட ஏன் இவ்வளவு பெருந்தொகை குரங்குகள் தேவை என்ற கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சட்டப்படி சூழல் பாதுகாப்பு நோக்கங்களிற்காக மாத்திரம் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாமிசத்திற்காக குரங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15