குடிநீர் கட்டணத்தை செலுத்தாத அரச நிறுவனங்களிடம் அபராதம் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

Published By: Vishnu

11 Apr, 2023 | 12:44 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இம்மாதம் முதல் குடிநீர் கட்டணத்தின் நிலுவைத் தொகையை செலுத்தாத சகல அரச நிறுவனங்களினதும் குடிநீர் கட்டண பட்டியல்களிருந்து 2.5 சதவீதம்  மேலதிக கட்டணத்தை அபராதமாக வசூலிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான குடிநீர் கட்டணத்தை தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாக குறிப்பிடுகிறது. 

பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவை நீண்ட காலமாக குடிநீர் கட்டணத்தை  செலுத்த தவறிய அரச நிறுவனங்களாகும். 

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுவது குறித்து, சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.  

பொதுவாக, குடிநீர் கட்டணம் 90 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

மேலும், குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால், 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அதிகாரி, பொதுவாகவே  இந்த தள்ளுபடியானது சகல பாவனையாளர்களுக்கும் வழங்கப்படகின்ற ஓர் விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07