போலி பஹாமாஸ்தீவு கடவுச் சீட்டுடன் கட்டுநாயக்க வந்தடைந்த நைஜீரியப் பிரஜை கைது!

Published By: Digital Desk 5

11 Apr, 2023 | 11:18 AM
image

போலியான தகவல்களுடன்  தயாரிக்கப்பட்ட  பஹாமாஸ்  தீவுக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர்  நேற்று (10) கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

31 வயதுடைய நைஜீரிய பிரஜையான இவர், நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும் அங்கிருந்து மொராக்கோவுக்கும் சென்றுள்ளார். 

அதன் பின்னர் நேற்று மாலை 4.20 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் KR-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் விமான நிலையத்தை வந்தடைந்த  நிலையில் அவரது கடவுச் சீட்டை பரிசோதித்தபோது  அது  போலியானது என உறுதி செய்யப்பட்டது.

 இதனையடுத்து  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04