புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)

Published By: Priyatharshan

09 Jan, 2017 | 04:34 PM
image

http://www.virakesari.lk/article/15020

தொடர்ச்சி......

( ஆர். ராம்)

தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஒரு இடத்­திலே குவிக்­கப்­பட்­டி­ருப்பவை அதா­வது ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு ஒவ்­வான சொல்­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஏக்­கிய ரஜய என்­பதன் அர்த்­தத்தின் பிர­காரம் அதனை பயன்­ப­டுத்­து­வதில் எமக்கு எதிர்ப்­பி­ருக்­க­மு­டி­யாது. ஆனால் தமிழில் ஒற்­றை­யாட்சி எனவும்இ ஆங்­கி­லத்தில்  யுனிற்­றரி (unitary) எனவும் பயன்­ப­டுத்த முடி­யாது என்­பதே எமது நிலைப்­பாடு.

இருப்­பினும் ஏக்­கிய ரஜய என்­பதன் உண்­மை­யான அர்த்­தத்­திற்கு அப்பால் 1972ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போது வரைக்கும்  ரnவையசல ளவயவந என்­ப­தற்கு இணை­யாக அச்­சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதன் கார­ணத்தால் அச்­சொற்­ப­தத்தின் வரை­வி­லக்­க­ணமும் அதற்­க­ரு­கி­லேயே சொல்­லப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு.

அதா­வது ஏகிய ரஜய என்ற சொற்­பதத்தை பயன்­ப­டுத்­து­வ­தால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடி­யாத நாட்டை குறிப்­பதாக இருக்கும் என்­பது உறுப்­பு­ரையில் கூறப்­பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறு­வ­தாக அச்­சொற்­பதம் இருக்கக்கூடாது. ஆட்­சி­முறை என்­பது ஒற்­றை­யாட்சி என வரக்­கூ­டாது என்­பதே என்­பதே எமது நிலைப்­பாடு.

ஆனால் சொற்­பி­ர­யோ­கத்தால் மட்டும் அதனை அடைந்­து­வி­ட­மு­டி­யாது. ஓஸ்­ரியா நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என கூறப்­பட்­டி­ருந்­தாலும் அங்கு சமஷ்டி ஆட்­சியே நடை­பெ­று­கின்­றது. ஸ்பெயினில் ஒற்­றை­யாட்சி என எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் சமஷ்டி ஆட்­சி­மு­றையே நடை­பெ­று­கின்­றது.

ஆகவே வெறு­மனே பெயர்ப் பல­கை­யைப்­போட்­டு­விட்டு திருப்தி அடைய முடி­யாது. உள்­ள­டக்கம் சரி­யாக அமை­ய­வேண்டும். அதற்­காக உப­யோ­கிக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்­களில் நாம் கவனம் செலுத்­தா­ம­லில்லை. விசே­ட­மாக உள்­ள­டக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்கள் குறித்து நீதி­மன்­றங்கள் பொருள்­கோடல் செய்­யும்­போது ஒற்­றை­யாட்சி முறை என நியா­யா­திக்கம் செய்­யாத வகை­யி­லேயே அமை­ய­வேண்டும் என்­ப­திலும் கவனம் செலுத்­து­கின்றோம்.

 

கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்­வைத்து ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அச்­சொற்­ப­தத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் நேர­டி­யாக பயன்­ப­டுத்­து­மாறு அழுத்­த­ம­ளிக்­கின்­றதா?

 

பதில்:- சமஷ்டி என்ற சொற்­ப­தத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்­த­ம­ளிக்­க­வில்லை. நாம் தற்­போது எடுத்­துக்­கொண்டது திடீர் நிலைப்­பாடு அல்ல. பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவே நான் பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்­தி­ருக்­கின்றேன்.

யாழ்ப்­பா­ணத்தில் கஜேந்­தி­ர­கு­மா­ருடன் நடை­பெற்ற விவா­த­மொன்­றிலும் பெயர்ப்­ப­ல­கை­களால் மட்டும் நம்­பிக்கை வைக்­க­வில்லை. உள்­ள­டக்கம் சரி­யாக இருக்க வேண்டும் எனக் கூறி­யி­ருக்­கின்றேன்.

சமஷ்டி என்­ப­தில் இரண்டு முக்­கி­ய­மான அம்­சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்­பந்­த­மாக மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டால் அந்த விடயம் சம்­பந்­த­மாக மத்தி அதற்கு பின்னர் தலை­யி­டக்­கூ­டாது. அவ்­வாறு கொடுக்­கப்­பட்ட மாகா­ணத்­திற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மத்­தி தானா­கவே திரும்பி பெற்­றுக்­கொள்­ள­ாதவாறு இருக்க வேண்டும்.

இந்த இரண்டு அம்­சங்­களும் காணப்­ப­டு­மாயின் அது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்­கிய அம்­சங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­டு­வதுதான் எமது பிர­தான நோக்­க­மா­க­வுள்­ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையை மட்டும் எழுதி ஒட்­டப்­ப­ட­வேண் டும் என்­பது நோக்­க­மல்ல.

 

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப்படும் பய­ணத்தில் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­குமா?

 

பதில்:- இந்தப் பய­ணத்தில் சாத்­தி­ய­மாகும். ஆனால் உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­காது. இந்த வரு­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் உட­ன­டி­யாக வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­காது. அதற்­கான சாத்­தியக் கூறு­களும் அரி­தா­கவே உள்­ளது என்­பது தான் உண்­மை­யான எனது பதி­லாகும்.

அதற்கு காரணம் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு அதற்கு எதி­ராக இருக்­கின்­றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்­பாடு தொடர்பில் நாம் சரி­யாக அணு­க­வேண்டும். அவ்­வாறு சரி­யாக அணுகும் பட்­சத்­தி­லேயே தான் சிறிது காலம் தள்­ளி­யே­னும் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மாகும். 

ஆகவே நாம் முஸ்­லிம்­களின் கருத்தை நிரா­க­ரித்து வடக்குஇ கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும் என முரண்டு பிடிப்­போ­மா­க­வி­ருந்தால் தமிழ்இ முஸ்லிம் உறவு மேலும் விரி­ச­ல­டைந்து விடும்.

போர்க்­கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்­கப்­பட்­ட­மையால் தான் தற்­போது வடக்குஇ கிழக்கு இணைப்பு உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­கா­துள்­ளது. ஆகை­யி­னால் யாரையும் குறை கூறிக்­கொண்­டி­ருக்­காது அடுத்து எவ்­வாறு நக­ர­மு­டியும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும்.

வடக்குஇ கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். அவர்­க­ளு­டைய உத்­தி­யோகபூர்வ நிலைப்­பாடு என்­பதுஇ இணைப்­புக்கு எதி­ரா­னது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்­க­ளுக்கு காணப்­படும் பல­வி­த­மான பயங்கள்இ சந்­தே­கங்­களின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக இணங்க மறுக்­கின்­றார்கள்.

ஆகவே குறைந்த காலத்­தி­னுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பொறி­மு­றையை வைத்­துக்­கொண்டு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். தமிழ்இ முஸ்லிம் உறவு பாதிக்­கப்­ப­டாத நிலை­யி­ருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கூட ஒரு வரு­டத்­தினுள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்  என்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே முஸ்­லிம்­களின்  அங்­கீ­காரம் இல்­லாது அதனை சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யாது.

தமிழ்இ முஸ்லிம் உறவை சீர்­செய்யும் நோக்­கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதி­னொரு உறுப்­பி­னர்கள் இருந்­த­போதும் முத­ல­மைச்சர் பத­வியை விட்­டுக்­கொ­டுத்து ஒரு கூட்­டாட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்­பிக்­கையை மீளப்­பெ­று­வ­தற்­கான சில வழி­மு­றைகள்.  ஆகவே இந்த அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டதும் வடக்குஇ கிழக்கு உட­ன­டி­யாக வந்­து­விடும் என்று பொய்­கூ­று­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை.

 

கேள்வி:- வடக்குஇ கிழக்கு இணைந்­தி­ருக்­கின்ற பட்­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு கரை­யோர நிர்­வாக அல­கொன்று உரு­வாக்­கப்­பட்டு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை தந்தை செல்வா உட்­பட அனைத்து தமிழ்த் தலை­வர்­க­ளும் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள். அந்த நிலைப்­பாட்­டி­லிந்து நீங்கள் விலகி நிற்­கின்­றீர்­களா?

 

பதில்:-  நாங்கள் அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாற­வில்லை. முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளும் மாற­வில்லை. தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் உடன்­பா­டுகள் எட்­டப்­பட்­டன. அந்த உடன்­பா­டு­களை நாம் தற்­போதும் ஏற்­றுக்­கொள்­கின்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது.

இருப்­பினும் சிலர் தற்­போது இணைப்பு இல்­லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேச­வேண்டும் எனக் கரு­து­கின்­றார்கள். எவ்­வா­றா­யினும் வடக்குஇ கிழக்கு இணைக்­கப்­ப­டு­கின்­ற­போது  தனி­யான முஸ்லிம் அலகு வழங்­கப்­ப­டு­வதை எதிர்க்­க­வில்லை. அதற்கு முழ­ுமை­யான இணக்கம் தெரி­விப்போம். இருப்­பினும் அதற்­கான உட­னடிச் சூழல் இல்லை.

 

கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் ஒன்று காணப்­பட்­டது. தற்­போது உள்­ளகஇ சர்­வ­தேச அர­சி­யலில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அர­சாங்­கத்­துக்கும்இ கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டிப்­பேச்­சு­வார்­த­்தையில் மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் அவ­சி­யமா? தற்­போது பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதா?

 

பதில்:- தற்­போது அனைத்துக் கட்­சி­யி­னரும் ஒன்­றாக அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை  வழி­ந­டத்தல் குழுவில் நடத்­து­கின்றோம். இந்த பேச்சுவார்த்­தைகள் மிகவும் பகி­ரங்­க­மாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சில சம­யங்­களில் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னர்­க­ளுடன் நாங்கள் பேச்சு நடத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான பேச்­சுக்கள் தான் இடம்­பெ­று­கின்­றன. அத­னை­வி­டுத்து அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டி­யான பேச்­சொன்று ஆரம்­பிக்­க­ப்ப­ட­வில்லை.

தற்­போ­தைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் அர­சாங்­கத்­திற்கும் பேச்­சு­வார்த்தை நடக்­கி­றது. அதில் மூன்­றா­வது தரப்பு இருக்­கின்­றது என்ற தேவை இல்­லாத நிலையில் தான் இருக்­கின்றோம். ஏனென்றால் நேர­டி­யா­கவே நாம் ஒரு­வ­ரோடு ஒருவர் பகி­ரங்­க­மாக பேசக்­கூ­டிய சூழல் இருக்­கின்­றது.

சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வா­றான விட­யங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்­பது நன்கு தெரிந்­த­வி­டயம். அதே­நேரம் நாம் சர்வ­தேச சமூகத்­துடன் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் அர­சாங்­கத்­து­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.

ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர

சாங்கஇ கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது  என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு

இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.                              

(முற்றும்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22