(எம்.மனோசித்ரா)
நாட்டை வங்குரோத்தடையச் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இனியொருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.
எனவே எந்தவொரு கட்சியும் தமக்கு சவால் அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் எமக்கு எவ்வித சவாலும் இல்லை. அரசாங்கம் தற்போது மாயாஜாலம் செய்து கொண்டிருக்கிறது.
100 - 200 ரூபாவிற்குள் காணப்பட்ட பொருட்களின் விலைகளை 1000 ரூபா வரை அதிகரித்து அதனை தற்போது மீண்டும் குறைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்த காலம் முடிந்து விட்டது.
பொருட்களின் விலைகளுக்கும் , எரிபொருள் விலைகளுக்கும் , நிவாரணப் பொதிகளுக்கும் மக்கள் தற்போது வாக்களிப்பதில்லை. வங்குரோத்தடைந்துள்ள நாட்டை யாரால் மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதை மாத்திரமே மக்கள் சிந்திப்பார்கள்.
எனவே அரசாங்கம் மாத்திரமல்ல. எந்தவொரு கட்சியும் அரசாங்கத்திற்கு சவால் அல்ல. பொதுஜன பெரமுனவினருக்கு தற்போது கிராமங்களுக்குச் செல்ல முடியாது.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுகிறது. எனவே அவர்களால் இனியொருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.
எனவே பொருட்களின் விலைகளைக் குறைத்தல் , ஏனைய கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தல் போன்ற வழிமுறைகளை பொதுஜன பெரமுன முன்னெடுக்கலாம். ஆனால் அவை எவற்றுக்கும் மக்கள் ஒருபோதும் ஏமாறப் போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM