வரிக் கொள்கைக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கூட்டாக அறிவிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்

Published By: Digital Desk 3

08 Apr, 2023 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்தக் கொள்கையை அரசாங்கம் உடன் மீளப் பெற வேண்டும் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்து திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய திங்கட்கிழமை மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் பிற்பகல் 2.30 க்கு சகல தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றை இணைந்து சம்மேளனமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்மேளனத்தில் எதிர்வரும் தினங்களில் வரிக் கொள்கைக்கு எதிராக எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியங்கள் சங்க சம்மேளனம், தொழிலாளர்கள் போராட்ட மத்திய நிலையம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம், அகில இலங்கை முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மத்திய நிலையம், தொழிற்சங்க கூட்டமைப்பு, இலங்கை மின்சாரசபை ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு  உள்ளிட்டவை இணைந்து இந்த சம்மேளனத்தை ஏற்பாடு செய்துள்ளன.

அத்தோடு இந்த சம்மேளனத்தில் வைத்தியர்கள், தாதியர், நீர் வழங்கல், வங்கி, துறைமுகம், விவசாய சங்கங்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டவையும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் வரிக் கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கங்களினால் வாராந்தம் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கத்தினால் ஸ்திரமான தீர்மானமொன்று வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே அடுத்த கட்டமாக எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து அவை நாளை தீர்மானிக்கவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46