கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை மக்கள் காட்டு யானைகளால் பாதிப்பு : பாதுகாப்பை வலியுறுத்தி கோரிக்கை

Published By: Nanthini

07 Apr, 2023 | 10:25 PM
image

ட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மரப்பாலம், புல்லுமலை, கரடியனாறு போன்ற பிரதேசங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, கடந்த 2 மாதங்களில் சுமார் 20 வீடுகளை உடைத்துள்ளதோடு, பல ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. 

எனவே, இந்த யானைகளிடம் இருந்து மனித உயிர்களை பாதுகாத்துத் தருமாறு கோரி, பிரதேச பொது அமைப்பினர் உதவி அரசாங்க அதிபரிடம் நேற்று வியாழக்கிழமை (6) கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயம் கமநல அமைப்பு, சின்ன புல்லுமலை மரண உதவிச் சங்கம், மரப்பாலம் கமநல அமைப்பு, சின்ன புல்லுமலை கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஒன்றிணைந்து, யானைகளில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றித் தருமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து, உதவி அரசாங்க அதிபர் தர்ஷினியிடம் மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். 

செங்கலடி - பதுளை ஏ5 பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ள குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து வீடுகளை உடைத்து, சேதப்படுத்துவது மற்றும் பயிர்ச் செய்கைகளை அழித்து வருகிறது. இதனால் பிரதேச மக்கள் தினந்தினம் உயிரை பணயம் வைத்து, அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் சிறுவர்களும் பயத்தின் மத்தியிலேயே ஒவ்வொரு இரவுப் பொழுதுகளையும் கழித்து வருவதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். 

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

இந்த பிரதேசங்களை சேர்ந்த பல குடும்பங்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம் ஆகும். பலர் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் காட்டு யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து துவம்சம் செய்வதுடன், பயிர்களையும் அழித்துள்ளன. தென்னை, பலா போன்ற மரங்களை முறித்துள்ளன. 

யானை தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 3 மாதங்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு தினந்தோறும் இரவு பகலாக யானைகளின் அட்டகாசத்தினால் கால்நடைகளை வளர்ப்போரும், அந்த பகுதி வழியே போக்குவரத்தில் ஈடுபடுவோரும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களும் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர். 

மேலும், பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணிகள் மற்றும் பற்றைக் காடுகளில் பகல் வேளைகளில் யானைகள் தங்குகின்றன. எனவே, அந்த பற்றைக்காடுகளை வெட்டி துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அந்த காட்டு யானைகளை வன விலங்கு அதிகாரிகள் மூலம் காட்டுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இந்த பகுதியில் வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள காரியாலயம் ஒன்றை அமைத்து, யானைகளிடமிருந்து எமது உயிர்களையும் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற   கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம். 

இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று திட்டங்களை செயற்படுத்துவதாக உதவி அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார் என அமைப்பினர் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11