மட்டக்களப்பு தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஆராதனைகள் 

Published By: Nanthini

07 Apr, 2023 | 05:25 PM
image

ட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஆராதனைகள் இன்று (7) இடம்பெற்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை சஹ்ரான் ஹாசிமின் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து, தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்  சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் படுகாயமடைந்தனர்.

இவ்வருடம் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளியான இன்றைய தினத்தில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன. 

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதனைகள் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை நாளை மறுதினம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 'உயிர்த்த ஞாயிறு' தினம் அனுஷ்டிக்கப்படும் வரை தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளின்போது தொடர்ந்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22