மட்டு கரடியனாற்று கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக இரவில் மண் அகழ்ந்து எடுத்து குவிக்கப்பட்ட 15 கீப் மணல் மீட்பு!

Published By: Vishnu

07 Apr, 2023 | 04:15 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்பிரிவிலுள்ள கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக இரவில் மண் அகழ்ந்து எடுத்து அந்த பகுதியில் குவிக்கப்பட்ட 15 கீப் கொண்ட ஆற்று மணலை இன்று வெள்ளிக்கிழமை (7) மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று காலை கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷhர தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த மண் குவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர்.

இதன் போது மண்மாபியாக்கள் ஆற்றில் மண் அகழ்வாற்கு அனுமதி இல்லாத நிலையில் இரவு வேளைகளில் ஆற்றில் இருந்து மணல்களை அகழ்ந்து இரவேடு இரவாக இந்த பகுதியில் குவித்துவிட்டு பின்னர் மண்யாட்டில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ள வாகனத்தில் மண்ணை ஏற்றி கொண்டும் செல்லும் சட்டவிரோத நடவடிக்கையினை மண்மாபியாக்கள் செய்துவருவதாகவும் அதன் ஒரு செயற்பாடுதான் இந்த மண்ணை அகழ்ந்து குவிக்ப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சுமார் 15 கீப் கொண்ட மண் குவிக்ப்பட்டுள்ளதுடன் எவரும் இதற்கு அனுமதி கோராத நிலையில் இருந்துள்ளதையத்து அந்த மணல்களை பொலிசார் மீட்டு அதனை கனரக வாகனங்களில் இதனையடுத்து  ஏற்றிச் சென்று பொலிஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டு அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57