இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை தான் செயலிழக்கச் செய்தததாக லெபனான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்திய சில மணித்தியாலங்களின் பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானிலிருந்து நேற்று இஸ்ரேலை நோக்கி நேற்று ரொக்கெட்டுகள் ஏவப்;பட்டதையடுத்து, இன்று காலை லெபனான் மற்றும் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் இன்று காலை ஷெல் தாக்குதல்களை நடத்தியது.
ஹமாஸ் இயக்கத்தை இலக்குவைத்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று லெபனானிலிருந்து 34 ரொக்கெட்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரொக்கெட்டுகள் பொருத்தப்பட்டு, இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பல்குழல் ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை தான் செயலிழக்கச் செய்தததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மேற்படி ரொக்கெட் லோஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் லெபானன் இராணுவம் தெரிவித்துள்ளது. (Photos: AFP)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM