வைத்தியர்களின் உடை அணிந்து, வைத்தியர் போல் நடித்து பலரிடம் பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்படும் ஒருவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவக் குழாய் மற்றும் வைத்தியர்கள் அணியும் சீருடை, மற்றும் வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான புத்தகங்களையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வளாகத்தில் சுற்றித் திரியும் இந்தச் சந்தேக நபர் வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிட வருபவர்களிடம் தமக்குரித்தான ஆப்பிள் தோட்டத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தனது மனைவி உள்ளார் எனக் கூறி அவரது பெயரை பயன்படுத்தி நீண்டகாலமாக நிதி மோசடி செய்து வந்துள்ளமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM