அரசாங்கத்துடன் இணைபவர்களின் இலக்கு பணமும் அமைச்சுப்பதவியும் மாத்திரமே - ஹர்ஷண ராஜகருணா

Published By: Digital Desk 5

06 Apr, 2023 | 10:13 AM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும் , அமைச்சுப்பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல.

அமைச்சுப்பதவியில் மோகமும் , 200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் ரூபாவுக்கும் , அமைச்சுப்பதவிகளுக்குமேயாகும். 200 மில்லியனை விரும்புபவர்களும் இருக்கக் கூடும். அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் இணைவது நாட்டுக்காக அல்ல.

மக்களுக்கு நன்மையான திட்டங்களுக்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே நிச்சயம் ஒத்துழைப்பினை வழங்குவோம். அதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டுமென்ற தேவை கிடையாது.

பிரதான எதிர்க்கட்சியாக நாம் எமது கடமைகளை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே 2019இல் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.

அன்று நாம் கூறியதை முற்றாக எதிர்த்தவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறியவுடன் , மேசைகளைத் தட்டி கரகோஷம் எழுப்புகின்றனர்.

இவ்வாறான இரட்டை நிலைப்பாடுடையவர்களே அரசாங்கத்தில் உள்ளனர். எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்தில் இணைவார்களாயின் அமைச்சுக்கள் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் மீதான சுமை மேலும் உயர்வடையுமே தவிர , நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49