ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 13பேர் பலி 

Published By: Selva Loges

08 Jan, 2017 | 05:51 PM
image

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள ஜமிலா சந்தைப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 13பேர் இறந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது :

ஜமிலா சந்தைப் பகுதி வழியாக சந்தேகிக்கும் படி வந்த வாகனம் ஒன்றை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த படையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதால் வாகனத்தின்மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் வாகனத்தினுள் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த தற்கொலைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

குறித்த தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 60 பேருக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10