பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தேர்தலை மே மாதம் நடத்த வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்தலை தாமதிப்பதற்கான முயற்சியை நீதிமன்றத்தின் உத்தரவு தடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானின் ஓர் அரசியல் வெற்றியாக இது கருதப்படுகிறது.
இம்ரான் கான் தலைமையிலான பிரிஐ கட்சியின் மத்திய அரசாங்கம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் கவிழ்க்கப்பட்டது.
அதன்பின் விரைவாக பொதுத்தேர்தலை நடத்துமாறு இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.
பிரிஐ கட்டுப்பாட்டிலிருந்த பஞ்சாப், கைபர் பக்துன்கவா மாகாண அரசாங்கங்களையும் இம்ரான் கான் கலைக்கச் செய்தார்.
பாகிஸ்தானின் அரசியலமைப்பின் படி இச்சட்டமன்றங்களுக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தேர்தலுக்கான நிதியின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு பாகிஸ்தரின் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. ஒக்டோபர் மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாகாண சட்டமன்ற தேர்தல் தாமதிக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது, 90 நாட்களுக்கு மேல் தேர்தல் திகதி நீடிக்கப்பட முடியாது என பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) நேற்று தெரிவித்தது.
மே 14 ஆம் திகதிக்குள் இத்தேர்ததலை நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாண தேர்தல்களை நடத்துவதற்காக 21 பில்லியன் பாகிஸ்தான் ரூபா நிதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் வழங்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM