'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடல் மூலம் உலகின் கவனத்தை பெற்றவர் பொத்துவிலை சேர்ந்த கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் அஸ்மின்.
அவர் எழுதிய "சண்டாளனே ஏதோ ஆகுறனே" என்ற புதிய பாடலின் வெளியீட்டு விழா இந்தியாவில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வடபழனி வளாகத்தில் பிரமாண்டமாய் நடைபெற்றது.
இயக்குநர் ராசய்யா கண்ணன் இயக்கத்தில் உள்ளத்தை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'இது கதையல்ல நிஜம்' என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.
இப்பாடலை பிரபல பின்னணிப் பாடகர் வேல் முருகன், ஆலா பாலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
எதிர்வரும் 7ஆம் திகதி திரைக்கு வரவுள்ள 'இது கதையல்ல நிஜம்' படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பல ஆண்டுகள் பணிபுரிந்த தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.
சந்தோஷ் சரவணா, சுனு லட்சுமி, கோவை சரளா, நண்டு ஜெகன், ஆர்.வி.உதயக்குமார், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் நடிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தை கனடாவைச் சேர்ந்த இலங்கை தொழிலதிபர் கீதா ராதா இணைந்து தயாரித்துள்ளார்.
எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் உள்ள 'சண்டாளனே...' பாடலை உத்தியோகபூர்வமாக இயக்குநர் அமீர் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
இப்பாடல் சுமார் நான்காயிரம் மாணவர்கள் மத்தியில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் பேசுகையில்,
இதுவரை அமங்கலச் சொல்லாக கருதப்பட்டு வந்த 'சண்டாளனே' என்ற வார்த்தையை காதலர்கள் பேசி கொஞ்சுகின்ற வார்த்தையாக எழுதியுள்ளேன். தாழ்த்தப்பட்டதாக கருதப்பட்டதை வாழ்த்தப்படுவதாக மாற்றியுள்ளேன்.
எல்லா சாதியினரும், ஏன் எல்லா சமூகத்தினரும் தமக்குள் செல்லமாக கூப்பிடும் நல்ல வார்த்தையாக சண்டாளன், சண்டாளி நிச்சயம் மாறும். அதன் மூலம் ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட வகுப்புவாதம் தகர்க்கப்படும். ஒரு படைப்பாளியாய், அது என் கடமையும் கூட.
இங்கு அனைவரும் சமமானவர்கள். எங்களுக்குள் பேதங்கள் இருக்கக்கூடாது. அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும்.
'ஐயோ சாமி' பாடலுக்கு நிகராக நிச்சயம் இப்பாடலும் பேசப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்தப் பாடல் இணையத்தளங்களிலும் இப்போது வரவேற்பு பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM