இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ்

Published By: Nanthini

01 Apr, 2023 | 05:29 PM
image

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழான சிறு போகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள் பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக தான் உணர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் இவ்வாண்டுக்கான சிறுபோகச் செய்கை  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் பின்தங்கிய பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, கல்மடுக் குளத்தின் கீழான விவசாயிகளுக்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக, கடந்த 27ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் இணைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து இன்றைய தினமும் (ஏப். 1) கலந்துரையாடலொன்று கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடுகள், நீர்ப்பங்கீடுகள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்களை பெறாமல், ஒரு சிலர், தன்னிச்சையாக முடிவெடுத்து, தங்கள் பயிர் செய்யும் உரிமைகளை தடுத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கல்மடுக் குள விவசாயிகளுக்கு நீர்ப்பங்கீடுகள் வழங்கப்பட்டமை தொடர்பாகவும் உரையாடப்பட்டது. 

மேலும், காலபோக அறுவடை நிறைவு பெறுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே சிறுபோக செய்கைக்கான கூட்டத்தினை கூட்டி தீர்மானங்கள் எடுத்தமை குறித்தும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், 

பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக உணர முடிகின்றது. எனவே, ஏனைய விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையிலேயே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா. தேவரதன், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் கருணாநிதி, இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ். செந்தில்குமரன், கமநல சேவை நிலையங்களின் பெரும்போக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27