வீட்டு வாடகை ஒப்பந்தத்தை முறையாக இரத்துச் செய்யாததாலும், ஒரு மாத வாடகையைக் கொடுக்க மறுத்ததாலும் அழகு ராணி ஒருவர் மீது கட்டிட நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர்.
டிஃபானி சமூகத்தின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தவர் மில்லாநானின் சந்த்தேப். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கின் ரச்சாதாபிசேக் வீதியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவர் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் அங்கிருந்து வெளியேறப்போவதாக கட்டிட நிர்வாகிகளிடம் தெரிவித்தார் சந்த்தேப். எனினும், இதுபற்றி ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே அறிவித்தல் தரவில்லை என்பதால், ஜனவரி மாத வாடகையையும் சேர்த்துத் தர வேண்டும் என்று நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை அலட்சியம் செய்த சந்த்தேப், வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் கோபம் கொண்ட கட்டிட நிர்வாகிகள், சந்த்தேப்பின் வீட்டுக்குச் சென்று அவர் மீது சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, தற்காப்புக்காக கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அவர்கள் மீது தூக்கியெறிந்து விரட்டினார் சந்த்தேப். பின்னர் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார் சந்த்தேப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கட்டிட நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM