தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி - எதிர்க்கட்சி தலைவர்

Published By: Digital Desk 3

01 Apr, 2023 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் மக்களின் உரிமையை மீறும் சர்வாதிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர் சமூகம், பொது மக்களை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தெஹிவளையில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் சூழ்ச்சியின் மூலம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர் சமூகம், பொது மக்கள் உள்ளிட்டோரை பயங்கரவாதத்தை ஒழிக்கும் பெயரில் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதே இதன் நோக்கமாகும்.

மக்களின் உரிமையை மீறும் சர்வாதிகாரம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை திசை திருப்புவதற்காக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய இந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைய தயாராக உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 2000 இலட்சம் ரூபாவை (200 மில்லியன்) வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரசாங்கத்திலுள்ளவர்கள் வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் , இவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு பித்து பிடித்துள்ளதா என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐ.ம.ச.வினர் 200 மில்லியனுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காட்டிக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா?

கடந்த 2020 பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையிலும் , 54 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த அப்பாவி மக்களுக்கு எவரும் துரோகமிழைக்க மாட்டார்கள். தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக் கூறுபவர்கள் , தமது அரசாங்கத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை செலவிடத் தயாராகவுள்ளனர்.

பணத்திற்கு அடிபணியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மில் இல்லை. அவர்கள் அடிபணிவது மக்கள் ஆணைக்கு மாத்திரமே. எமது பாராளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் பணம் கொடுத்து வாங்குங்கள் என சவால் விடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59