(எம்.மனோசித்ரா)
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டு கடந்த வாரம் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தற்போது சேவையில் இல்லாதோர் எவ்வாறு கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்தனர் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின்போது கொலன்னாவ உள்ளிட்ட எரிபொருள் முனையங்களுக்குள் சேவையிலிருந்து விலகியவர்களும், ஓய்வு பெற்றவர்களும் பிரவேசித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM