முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குப்பி விளக்கு சரிந்து தீ பற்றியதில் குழந்தை உயிரிழப்பு

Published By: Vishnu

31 Mar, 2023 | 10:48 AM
image

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் 06 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

விசுவமடு பகுதியைச் சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23 ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டதால், தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது, குழந்தை படுக்கையில் உருண்டு, குப்பி விளக்கினை தட்டி விழுத்தியுள்ளது. 

அதனை அடுத்து ஏற்பட்ட தீ பரம்பலில் குழந்தை சிக்கி , தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24