மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர் ஆன்சாங்சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உட்பட 40 கட்சிகளை கலைத்துள்ளதாக மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
என்எல்டி உட்பட பல கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன என மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.புதிய பதிவு சட்டத்தை இந்த கட்சிகள் ஏற்க மறுத்ததன் காரணமாகவே இந்த கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன என இராணுவஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மியன்மாரின் புதிய கட்சிகள் பதிவு சட்டம் காரணமாக மியன்மாரில் அரசியல் செயற்பாட்டிற்கான தளம் மேலும் குறைக்கப்படுவது குறித்து கரிசனைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆட்சியாளர்களின் அதிகரிக்கும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளிற்கு மத்தியில் மியன்மார் மக்கள் தொடர்ந்தும் தங்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
40 கட்சிகளை இல்லாமல் செய்வது குறித்த அறிவிப்பை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உரிய பங்குதாரர்கள் இன்றி நடத்தப்படும் தேர்தல்களை சுதந்திரமானவை நியாயமானவை என கருதமுடியாது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM